தர்மபுரி: சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். வெள்ளிக்கிழமை மாலை பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் முருகன் கோவில் அடிவாரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், செந்தில், வீரமணி, கமலேஷ் ஆகிய மூவர் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தபோது, கமலேஷ் தப்பி ஓடிவிட்டார். செந்தில் மற்றும் வீரமணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, தலைமறைவான கமலேஷனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி