அரூரில் ரூ.8 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

நேற்று (ஜூன் 7)  நடைபெற்ற ஏலத்திற்கு 400 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டது. மஞ்சள் விரலி குண்டு குவிண்டால் 12,379 ரூபாய் முதல் 12,809 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 11,509 ரூபாய் முதல் 11,969 ரூபாய் வரையிலும் விற்பனையானது. நேற்று (ஜூன் 7) நடந்த ஏலத்தில் ரூ. 8 லட்சத்திற்கும் மேல் மஞ்சள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி