இந்த நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொது பணித்துறை அதிகாரி குமார் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து மலர் தூவி ஏரியின் மதகை திறந்து வைத்தனர். இந்த ஏரி மூலம் காரிமங்கலத்தை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு சென்றடையும். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் குட்டூர் ராசப்பன்குட்டை ஏரி நிரம்பி துணை ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் அட்மா மாரியப்பன் சுற்றுச்சூழல் தலைவர் அணி அமைப்பாளர் கண்ணபெருமாள், கணேசன், பூபதி, செந்தில்குமார், குருநாதன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்