இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பழனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு