தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுகிறது. நேற்று மார்ச் 21 நடைபெற்ற வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். மேலும் நேற்று ஆடுகள் தரம் மற்றும் ரகத்தின் அடிப்படையில் 5,000 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தமாக நேற்று ஒரே நாளில் 25 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.