மேலும் விசாரணை நடத்தியபோது அவர்கள் சுங்கார் அள்ளி பகுதியைச் சேர்ந்த கௌதமன், கோபி, பிரதீப், ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கடத்தூர் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.