தர்மபுரி: எம்பி தலைமையில் கேக் வெட்டி.. திமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102-ஆவது பிறந்த நாளான இன்று தர்மபுரி உழவர் சந்தையில் செம்மொழி நாளாக, தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி இன்று காலை கொண்டாடினார். 

முன்னாள் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லை வேந்தன், அன்பழகன், கோமணவள்ளி ரவி, சம்பத், கனகராஜ், சுருளிராஜன், கவுன்சிலர் மாதேஸ்வரன், அணிகளின் அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி எம்.பி. கௌதம் உதயசூரியன், சுற்றுச்சூழல் அணி இளைய சங்கர், சார்பு அணிகளின் துணை மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி அசோக்குமார், முருகேசன், சூர்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி