புளுதியூரில் ரூ. 42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று(செப்.25) நடந்த சந்தையில் மாடுகள் ரூ. 7, 500 முதல் ரூ. 39, 500 வரையும், ஆடுகள் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10, 000 வரையும், நாட்டுக்கோழி, சேவல்கள் ரூ. 350 முதல் ரூ. 1100 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ. 42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி