பெற்றோர் இது தொடர்பாக குழந்தைகள் நல உதவி மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுரேஷ் காவலர்கள் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சுரேஷ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவஞானம் தீர்ப்பு வழங்கினார்.