அரூரில் ரூ. 19. 28 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தர்மபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீரத்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, சிட்டிலிங், மாம்பாடி, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். நேற்று பிப்ரவரி 03 நடந்த ஏலத்தில் 172 விவசாயிகள் 828 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூபாய் 6,828 முதல் 8,989 வரை என 19.28 லட்சத்திற்கு ஏலம் போனது

தொடர்புடைய செய்தி