தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மார்ச் 23 இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். சிறிய அளவிலான ஆடுகள் 2,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.