தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட மக்களின் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தை மீட்டுத் தரவும் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இயக்கத்தினர் பங்கேற்றனர்.