'ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு குறித்தான விசாரணை இன்று (ஜன.13) நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைக் கடந்த ஜனவரி 9ம் தேதியே ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.