வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். வாக்காளர் பட்டியல் நீக்கத்திற்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.