அசையா சொத்து குறித்த பத்திரப் பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான நாளை (ஆகஸ்ட் 3) சனிக்கிழமை அன்று ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. பத்திரப் பதிவு மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10 மணி முதல் செயல்படும். பத்திரப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.