இலங்கையின் கிழக்கு மாகாண கடற்பரப்பில் உருவான டிட்வா புயல், வடமாகாண நிலப்பரப்பின் ஊடாக மீண்டும் கடலுக்குள் இறங்கி தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. வரலாறு காணாத புயலின் இந்த நகர்வால் இலங்கை முழுவதும் பெரும் கனமழை, வெள்ளம் ஏற்பட்டது. இந்த டிட்வா புயலால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.