இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 390ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல், கனமழையில் சிக்கி 720க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வெள்ள அபாயம் குறையும்போது, இலங்கையில் எலிக் காய்ச்சல் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.