மத்தியப் பிரதேச மாநிலத்தில், எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், காதலன் வீட்டை பெண்ணின் தந்தை இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காதலன் வீட்டார் அங்கிருந்து வெளியூருக்குச் சென்றுவிட்டனர். 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது சொந்த ஊர் திரும்பிய அவர்கள், காதலியின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.