வளைகுடா போர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், சுங்கக் கட்டணங்கள் ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது நுகர்வோரை மேலும் பாதிக்கும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்த சுங்கக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும், மாற்று வழிகளில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பேரமைப்பு கண்டனம் விடுத்துள்ளது.