கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூரை சேர்ந்த மாயவேல் மகன் வேலுசாமி, ராஜேந்திரன் மகன் ராஜதுரை இருவரது குடும்பத்திற்கும் முன் விரோதம் உள்ள நிலையில் கடந்த 29 ஆம் தேதி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, வேலுசாமி வீட்டின் கூரையை பிரித்து வீசி சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் விருத்தாசலம் சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தார்.