எதிர்கட்சித் தலைவர் இராகுல்காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து நேற்று (22.01.2025) விருத்தாசலம் பாலக்கரையின் முன்பு கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார, நகர, சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.