விருத்தாசலம் அருகே ஆலடி சாலையில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன் (28) என்ற இறைச்சி கடை உரிமையாளர், நேற்று காலை கோழியை சுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.