கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கருங்குழி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் (ஜூன் 4) விருத்தாசலம் தனியார் வங்கி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.