விருத்தாசலம் ராதா கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தவருமான சரவணன் (47) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சாவடிக்குப்பம் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆயுதப் படை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.