விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.