கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர், அங்கு அதிகாலை 4 மணியளவில் டீ கடை திறந்து இருப்பதை பார்த்துள்ளார். உடனே அங்கு சென்ற காவலர், ஏன் இந்த நேரத்தில் கடையை திறந்தாய்? என கூறி ஊழியர் வீரமணியை தாக்கியுள்ளார். மேலும், கடையை அடித்து நொறுக்கிடுவதாக மிரட்டியுள்ளார். குற்றச்சம்பவங்களை குறைப்பதற்காக காலை 5 மணிக்கு தான் கடைகளை திறக்கவேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குற்றத்தை குறைப்பதுதான் நோக்கம் என்றால் டாஸ்மாக் கடையில் இந்த காக்கிகள் தங்களது கறாரை காட்டலாமே எனப் பலர் கேட்கத்தான் செய்கிறார்கள். உங்கள் கருத்து என்ன மக்களே?