அப்போது கர்னத்தம் புறவழிச்சாலையை அவர் கடக்க முயன்றபோது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிராவல்ஸ் பேருந்து ராதாகிருஷ்ணன் மீது மோதியதில் உடல் நசுங்கி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.