கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த உலகநாதன் (57) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.