கடலூர்: இருசக்கர வாகனம்- கார் மோதி விபத்து; ஒருவர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொண்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் வயது 50 தந்தை பெயர் ரத்தினவேல். இவர் நேற்று 30. 10. 2024 ஆம் தேதி இரவு அன்று தனது மகன் பசுபதி வயது 12 என்பதுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அம்மா உணவகம் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த டி என் 91யு 9500 என்ற பதிவுஎண் கொண்ட ஆட்டோவின் மீது மோதியது.

ஆட்டோ பின்னால் வந்த டிஎன் 65 ஏ ஜே 9622 என்ற பதிவில் கொண்ட மாருதி சுசுகி ஏர்டிகா கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து ஆண்கள் நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி