இறையூர்: குட்கா பாக்கெட்டுகளை விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான காவல் துறையினர் நேற்று(அக்.5) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இறையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்த போது அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 735 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் கூடலூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி