கடலூர்: மதிமுக பொதுச்செயலாளர் துரைவைகோ பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மதிமுக பொதுச்செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான இளம்புயல் துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் ஆதரவற்றோர் இல்லத்தில் மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பொயனப்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கவுன்சிலருமான இரா. சம்பத்குமார் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கழகப் பொருளாளர் செந்திலதிபன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் கோ. சௌந்தரராஜன், கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்கள். 

பின்னர் பொயனப்பாடியில் உள்ள மாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் இனிப்புகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது. தொடர்ந்து பொனப்பாடி ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயிலில் துரைவைகோ பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு லட்சுமி மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். தொடர்ந்து மறைந்த மாவட்ட பிரதிநிதி காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவுகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்கள். இதில் கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி