புதுவை: IPL டிக்கெட் மோசடியால் ரூ. 2 லட்சம் இழந்த 10 பேர்

வருகின்ற மார்ச் 22 முதல் நடைபெற உள்ள IPL கிரிக்கெட் தொடரின் சென்னை Vs மும்பை மற்றும் அனைத்து IPL போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அதற்கு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செய்தி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

இணையவழி குற்றவாளிகள் உங்களிடம் பணம் பறிப்பதற்காக மேற்கூறிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் இதை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தற்போது புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக புகார் வந்துள்ளன. 

ஆகையால் இணைய வழி குற்றவாளிகள் அனுப்பும் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும் என இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கின்றது. பொதுமக்கள் யாரேனும் இதன் மூலம் பணத்தை இழந்திருந்தால் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்கள் 1930, 04132276144, 9589205246 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி