கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 13 வயது மாணவியை 26 வயது இளைஞர் கார்த்திக் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.