இதற்கிடையில் தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இது தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த மேகவர்மன், ரஞ்சித் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மகன் நீதிமாறன் என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
படகில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து.. நடுக்கடலில் மீனவர்கள் தவிப்பு