இந்த நிலையில் மணியின் தாய் சுந்தரி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த இளம் பெண்ணின் தந்தை ரமேஷ், தாயார் மகேஸ்வரி மற்றும் அவர்களது உறவினர்கள் மணிமாறன், கோபால் மனைவி பரமேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து வாசு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த சுந்தரியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் உள்பட 4 பேர் மீது பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.