இதில் தலையில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பழனிவேல் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் கோமாவில் இருந்து வந்த தீனதயாளன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் நெல்லிக்குப்பம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வருகின்றனர்.