தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (மே 6) காலை வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில், மதியம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.