கடலூர் மாவட்டம் பி. என். பாளையத்தை சேர்ந்த சுந்தர் என்பவரிடம், நெய்வேலி என். எல். சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ரூ.16 லட்சம் பெற்றுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் காவல்துறையினர் ராஜேஷை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.