கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று இரவு கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.