வாணதிராயபுரம்: அமைச்சர் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம்

மறைந்த அகில இந்திய தொமுச பேரவை துணைத்தலைவர் மற்றும் டாஸ்மார்க் தொமுச மாநில தலைவரும், சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தாதேவி தந்தை இராசவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி வாணதிராயபுரம் ஊரில் நடைபெற்றது. 

இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்.எல்.ஏ மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி