கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல், கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.