குறிஞ்சிப்பாடி பகுதியில் 3 வது நாளாக மழை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செப் 30) காலை முதல் 3 வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி