கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அரவான் களபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.