கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே பல மாதங்களாக சேதமடைந்திருந்த சுமார் 50 மீட்டர் சாலை, நேற்று நமது லோக்கல் ஆஃப் செய்தியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக இன்று சீரமைக்கப்பட்டது. இதனால் தினசரி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததும், விபத்து ஏற்படும் அபாயமும் நீங்கியுள்ளது. சாலை சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.