வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு கிழக்கு கோட்டக்கரை பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியை நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தமிழ்செல்வன், நகர மன்ற துணை தலைவர் சுப்பராயலு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.