கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கம்பளிமேடு என்கிற ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வி அமைச்சர் செழியன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு உதவித் திட்டங்களை வழங்கினர்.