கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று (டிச.11) காலை முதல் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி