தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை (11 ஆம் தேதி) காலை 10 மணியளவில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.