காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வராஜ் (24) என்பவர், தனது அக்காள் திருமணத்துக்கான பரிசம்போடும் நிகழ்ச்சியில் நண்பர் ரஞ்சித்துடன் (23) பங்கேற்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் திரும்பும்போது விபத்துக்குள்ளானதில் விஸ்வராஜ் உயிரிழந்தார். ரஞ்சித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.