கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும், விருது பெறுவதற்கு உணவகங்கள் dofssavsplastic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.